துவரங்காடு (வரோதயநகர்)ப் படுகொலை – 17.08.1985


திருகோணமலை நகரிலிருந்து நான்கு மைல் தொலைவில் வரோதயநகர்க் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்திற் பெரும்பாலானவர்கள் விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களும் ஆவர். 17.08.1985 அன்று நண்பகல் 12.30 மணியளவில் ஆயுதம் தரித்த சிங்களக் குழுவினர்; வெள்ளைவானில் கிராமத்துக்குள் நுழைந்து அப்பகுதி மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் பத்துப் பேர் உயிரிழந்தனர். எட்டுப் பேர் படுகாயமடைந்தனர்.